திங்கள், 26 மே, 2014

இது ஒரு கூறு இடுகை (This is Sample Post)

நான் சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளுக்கும் பயணிக்கும் போது தமிழ்மக்கள் என்னிடம் “உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?” எனக் கேட்கின்றனர். இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட காணொலியைப் பதிவேற்றம் செய்துள்ளனர்.  இருந்தும்  தமிழ் மக்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என நம்புகின்றனர்.

இவ்வாறு அரசுசாரா அமெரிக்க இணையதளமான Roads & Kingdoms வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையை ஊடகவியலுக்கான  விருதுபெற்ற *Adam Matthews எழுதியுள்ளார். அதனை  மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

மே 18, 2009 அன்று சிறிலங்கா இராணுவத்தினர், தமிழ்ப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்றனர். இவரது தலைக்கு அருகில் மிக நெருக்கமாக நின்றவாறு ஒரு துப்பாக்கிச் சூட்டுடன் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டார் எனக் கூறப்படுகிறது.

முன்னர் பிரபாகரனின் கூட்டணியிலிருந்து பின்னர் சிறிலங்கா அரசாங்க விசுவாசிகளாக மாறிய இரண்டு பேரைக் கொண்டு பிரபாகரனின் சடலம் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டதுடன், மரபணுப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இவரது உடலம் எரிக்கப்பட்டது.

பிரபாகரனின் மரணத்துடன் 26 ஆண்டுகால யுத்தம் சிறிலங்காவில் நிறைவுக்கு வந்தது. போர் முடிவடைந்திருந்தாலும் கூட, சமாதானம் என்பது முற்றாக இங்கு நிலவவில்லை. சிறிலங்காவின் தமிழ் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு அடக்குமுறைகள் நிலவுகின்றன.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். தமிழர் வாழும் பகுதிகளில் பலசரக்குக் கடைகள் தொடக்கம் விடுதிகள் வரை சிறிலங்கா இராணுவத்தினர் நடாத்துகின்றனர்.

இதனால் உள்ளுர் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. சிறிலங்கா இராணுவத்தினர் தம்மீது சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்ளலாம் என்ற அச்சத்தில் தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டைவிட்டுப் புலம்பெயர்கின்றனர்.

போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர், தமிழ் மக்கள் தமக்கான உண்மையான இருப்பிடத்தையோ அல்லது நீதியைப் பெற்றுக் கொள்ளமாட்டோம் என நம்புகின்றனர்.

நான் சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளுக்கும் பயணிக்கும் போது தமிழ்மக்கள் என்னிடம் “உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?” எனக் கேட்கின்றனர்.

இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட காணொலியைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இருந்தும் தமிழ் மக்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என நம்புகின்றனர்.

நாடு கடந்த தமிழீழ  அரசாங்கத்தின் பிரதமரும்  தமிழ்  மக்களின் அவாக்களை  நிறைவேற்றுவதற்காக  தனது  அரசாங்கத்தின் ஊடாக செயற்படுபவருமான விஸ்வநாதன் உருத்திரகுமாரும் நானும் பல ஆண்டுகளாக மன்கற்றானிலுள்ள எமது விருப்பத்திற்குரிய செற்றினன்ட் விடுதியில் உணவு உண்பது வழக்கமாகும்.

இவ்வாறு நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட ஒருநாள் பிரபாகரன் தொடர்பாக அவர் சில நினைவுகளைப் பகிர்ந்தார். அதாவது தான் நேரடியாகப் பிரபாகரனின் உடலைப் பார்க்கும் வரை, இவர் இறந்துவிட்டார் எனத் தான் நம்பமாட்டேன் எனக் கூறினார்.

சிறிலங்காவின் போர் தொடர்பாக சமந் சுப்பிரமணியன் [Samanth Subramanian a 'New Yorker' contributor] ‘இந்தப் பிரிக்கப்பட்ட தீவு’ என்கின்ற நூலை வெளியிட்டிருந்தார்.

இந்த நூலில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக மக்கள் நம்புவதற்கான காரணங்கள் என்ன என்பதை எடுத்துரைத்திருந்தார். “பிரபாகரன் வாழ்ந்த வாழ்க்கை, புலிகள் மிகவும் இக்கட்டான போரின் போதும்

அதிலிருந்து தப்பித்தமை போன்ற பல்வேறு காரணங்களால் இவர் உயிருடன் பிடிபடுவது மிகவும் கடினமானதாகும்.

பிறிதொரு காரணத்தை நோக்கில், பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டார் எனக் கூறப்படுகின்ற போதிலும் இவர் ஒரு நம்பகமற்ற சாட்சியத்தின் முன்னால் அதாவது  இராணுவத்தினர் போன்ற நம்பகமற்ற   தரப்பினர் முன்னிலையிலேயே  படுகொலை செய்யப்பட்டார் என்பதால்  இதனை தமிழ் மக்கள் நம்பமறுக்கின்றனர்” என சுப்ரமணியம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ப் புலிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டதுடன், குண்டுத்தாக்குதல் அங்கிகளையும் தயாரித்தனர். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக தமிழ்ப் புலிகள் உலகில் பேசப்பட்ட ஒரு கிளர்ச்சி அமைப்பாகக் காணப்பட்டது.

புலிகளின் கொடியானது இரத்தச் சிவப்பு நிறத்தைப் பின்னணியாகவும், நடுவில் பாயும் புலியுடன் அதன் இரு பக்கங்களிலும் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் இவற்றைச் சூழ துப்பாக்கி ரவைகளையும் சித்தரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டன.

1983 தொடக்கம் 2009 வரையான  காலப்பகுதியில்  புலிகளின்  தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கிட்டத்தட்ட 1000 இற்கும்  மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பிரபாகரன் ஒரு இரக்கமற்ற, கடும்போக்கான தலைவராகக் காணப்பட்டாலும் கூட, இவரது தமிழ்ச் சமூகத்தினர் இவரது வன்முறையைத் தமது இறுதி நம்பிக்கையாகக் கொண்டிருந்தனர்.

சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதிகளைத் தமது பாரம்பரிய பிரதேசங்களாகக் கொண்ட சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்காவின் பெரும்பான்மை சமூகமான சிங்களவர்கள் அடக்குமுறைகளை மேற்கொண்டதால் யுத்தம் ஆரம்பமானது.

போரின் ஆரம்ப காலங்களில், இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் இந்தியாவில் வைத்துப் புலிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

ஆனால் 1987ல், புலிகள் மேலும் வளர்ச்சியடைந்து மேலும் வன்முறையாளர்களாக மாறிய போது, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சிறிலங்கா அரசாங்கத்தின் ஒப்புதலுடன் புலிகளை அழித்தொழிப்பதற்காக சிறிலங்காவுக்கு இந்திய அமைதிகாக்கும் படையை அனுப்பினார். மரபுப் போர் உத்திகளை நன்கறிந்திருந்த புலிகள் இந்திய அமைதி காக்கும் படையைத் தோற்கடித்தது.

1 கருத்து: